search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலி
    X
    பலி

    இரணியல் அருகே படியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

    இரணியல் அருகே வீட்டின் படியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    இரணியல்:

    இரணியலை அடுத்த நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 36). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதற்காக வெளியே வந்தார். அப்போது அவர் வீட்டின் படியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. 

    இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேம்ஜி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×