search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிள் திருட்டு
    X
    மோட்டார் சைக்கிள் திருட்டு

    ஆண்டிப்பட்டி அருகே அடுத்தடுத்து 2 இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு

    ஆண்டிப்பட்டியில் அடுத்தடுத்து 2 இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது.

    ஆண்டிப்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கருக்கட்டான்பட்டியை சேர்ந்தவர் ராஜ பாண்டியன். இவர் தனது உறவினரை பார்க்க ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாப்பம்மாள் புரத்திற்கு வந்தார். அங்கு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உறவினரை பார்க்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.60ஆயிரம்.

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள தக்கம் பட்டியை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் (64). இவர் அப்பகுதியில் ஜவுளிகடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இவர் வீட்டுக்கு சாப்பிட சென்றார். அப்போது தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்தி இருந்தார். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதையும் மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜபாண்டியன், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் தனித்தனியே ஆண்டிப்பட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×