என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாங்குநேரி-களக்காட்டில் ரகளை செய்த 3 பேர் கைது
Byமாலை மலர்12 Nov 2019 12:27 PM GMT (Updated: 12 Nov 2019 12:27 PM GMT)
நாங்குநேரி-களக்காட்டில் ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் கீழப்பண்டாரபுரத்தில் ரோந்து சென்றனர். அப்போது மேலப்பண்டாரப்புரத்தை சேர்ந்த சின்னத்துரை மகன் விஜயகுமார் (வயது 26) என்பவர் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்று கொண்டு ரகளை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அவரை கைது செய்தனர். இது போல பரப்பாடி பஜாரில் ரகளை செய்த பன்றிமலையை சேர்ந்த மகாதுரை மகன் மாரி செல்வத்தையும் (30) போலீசார் கைது செய்தனர்.
களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் மாவடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது நெரிஞ்சிவிளையை சேர்ந்த பாஸ்கர் (45) சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்று கொண்டு, அந்த வழியாக செல்வோரை அவதூறாக பேசிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X