search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நாங்குநேரி-களக்காட்டில் ரகளை செய்த 3 பேர் கைது

    நாங்குநேரி-களக்காட்டில் ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் கீழப்பண்டாரபுரத்தில் ரோந்து சென்றனர். அப்போது மேலப்பண்டாரப்புரத்தை சேர்ந்த சின்னத்துரை மகன் விஜயகுமார் (வயது 26) என்பவர் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்று கொண்டு ரகளை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அவரை கைது செய்தனர். இது போல பரப்பாடி பஜாரில் ரகளை செய்த பன்றிமலையை சேர்ந்த மகாதுரை மகன் மாரி செல்வத்தையும் (30) போலீசார் கைது செய்தனர்.

    களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் மாவடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது நெரிஞ்சிவிளையை சேர்ந்த பாஸ்கர் (45) சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்று கொண்டு, அந்த வழியாக செல்வோரை அவதூறாக பேசிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×