என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடபாதிமங்கலம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல்
Byமாலை மலர்12 Nov 2019 9:26 AM GMT (Updated: 12 Nov 2019 9:26 AM GMT)
வடபாதிமங்கலம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த தாமரைசெல்வன் மீது வழக்குப்பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் அவரை தேடி வருகிறார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து வருபவர் பார்த்தசாரதி (வயது 56).
இந்த நிலையில் பள்ளியில் பணியில் இருந்த பார்த்தசாரதியிடம் அதே ஊரை சேர்ந்த தாமரைசெல்வன் , தனக்கு பெற்றோர்- ஆசிரியர் கழகத்தில் பொறுப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி, பெற்றோர்கள் கூட்டம் நடத்தி அதில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதை கேட்டு ஆத்திரம் அடைந்த தாமரைசெல்வன், திடீரென ஆவேசத்தில் பார்த்தசாரதியை திட்டினார். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இதுபற்றி தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி, வடபாதிமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்து வரும் தாமரை செல்வனை தேடி வருகிறார்.
தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி, திருவாரூர் மாவட்ட கல்வி அதிகாரியாகவும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து வருபவர் பார்த்தசாரதி (வயது 56).
இந்த நிலையில் பள்ளியில் பணியில் இருந்த பார்த்தசாரதியிடம் அதே ஊரை சேர்ந்த தாமரைசெல்வன் , தனக்கு பெற்றோர்- ஆசிரியர் கழகத்தில் பொறுப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி, பெற்றோர்கள் கூட்டம் நடத்தி அதில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதை கேட்டு ஆத்திரம் அடைந்த தாமரைசெல்வன், திடீரென ஆவேசத்தில் பார்த்தசாரதியை திட்டினார். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இதுபற்றி தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி, வடபாதிமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்து வரும் தாமரை செல்வனை தேடி வருகிறார்.
தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி, திருவாரூர் மாவட்ட கல்வி அதிகாரியாகவும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X