search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து (கோப்புப்படம்)
    X
    விபத்து (கோப்புப்படம்)

    சாயர்புரம் அருகே விபத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் பலி

    சாயர்புரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சாயர்புரம்:

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சுந்தர பாண்டியபுரத்தை சேர்ந்த பெருமாள் மகன் முத்து (வயது 31). இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவி சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் இவர் கடந்த 7வருடங்களாக மனைவியை விட்டு பிரிந்து சாயர்புரம் தேரி ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் சாயர்புரம் தேரி ரோட்டில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது . இதில் படுகாயமடைந்த முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த சாயர்புரம் போலீசார் விரைந்து வந்து முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×