என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கெலமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- விவசாயி பலி
Byமாலை மலர்5 Nov 2019 2:53 PM GMT (Updated: 5 Nov 2019 2:53 PM GMT)
கெலமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தை அடுத்துள்ள தொட்டபேளூர் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது35). விவசாயியான இவர் மோட்டார் சைக்கிளில் கெலமங்கலத்தில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது துளசி நகர் அருகே வந்த போது எதிரே அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் முனியப்பன் (27) என்பவர் ஓட்டி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சிவலிங்கம் மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக முனியப்பனை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சிவலிங்கம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X