search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வாட்ஸ் அப்பில் பெண் கதறல் - அடித்து உதைத்த கணவன் உள்பட 2 பேர் கைது

    ஆண்டிப்பட்டி அருகே மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ராயவேலூரை சேர்ந்த ராயன் மகள் சின்னமாரி (வயது26). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக சின்னமாரி கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் தனது மகனின் துணிகளை எடுப்பதற்காக கணவரின் வீட்டிற்கு சென்றார். அப்போது சின்னமாரியை அவரது கணவர் பாலமுருகன் மற்றும் அவரது உறவினர் சொக்கன் ஆகியோர் கடுமையாக அடித்து தாக்கி மிரட்டி உள்ளனர்.

    படுகாயம் அடைந்த சின்னமாரி தன் கணவர் மீதும், சொக்கன் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு வாட்ஸ் அப்பில் வீடியோவை பதிவிட்டார். இந்த வீடியோ ஆண்டிப்பட்டியில் பரவலாக வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ராஜாதானி போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார். போலீசார் பாலமுருகன், சொக்கன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    Next Story
    ×