என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களியக்காவிளை அருகே திருமணம் ஆகாத வருத்தத்தில் வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்5 Nov 2019 10:09 AM GMT (Updated: 5 Nov 2019 10:09 AM GMT)
திருமணம் ஆகாத வருத்தத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணைநடத்தி வருகிறார்கள்.
களியக்காவிளை:
களியக்காவிளையை அடுத்த மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் சுதாகர் (வயது 39). இவர் பாறசாலை பகுதியில் லாரி ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதில் சுதாகர் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்தார்.
சம்பவத்தன்று குழிஞ்ஞான்விளை பகுதியில் உள்ள ஒரு கல்லறை தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த வழியாக சென்றவர்கள் அவர் பிணமாக கிடந்ததை பார்த்து களியக்காவிளை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் சொர்ணலதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X