search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுவண்ணாரப்பேட்டையில் 10 மோட்டார் சைக்கிள் உடைப்பு- கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

    புதுவண்ணாரப்பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோவில் தெரு மாட வீதியில் நிறுத்திருந்த 10 மோட்டார் சைக்கிள்களை மர்ம கும்பல் உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோவில் தெரு மாட வீதியில் நேற்று நள்ளிரவு ஒரு கும்பல் கலாட்டாவில் ஈடுபட்டது.

    அப்போது, அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் 10 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. அங்கிருந்த ஒரு வீட்டின் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் அந்த வீட்டின் முதல் மாடியில் உள்ள கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கின.

    பெட்ரோல் குண்டும் வீசப்பட்டது. இதில் பெட்ரோல் நிரப்பி நெருப்புடன் வீசப்பட்ட பாட்டில் அங்கு நின்று கொண்டிருந்த கார் மீது விழுந்து தீப்பற்றியது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

    இதனால், அந்த கார் லேசான சேதத்துடன் தப்பியது. இந்த கலாட்டாவை அறிந்ததும் அந்த பகுதியில் உள்ளவர்கள் அங்கு குவிந்தனர். இதற்குள் கலாட்டாவில் ஈடுபட்ட மர்ம கும்பல் தப்பி ஓடி விட்டது.

    இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி மக்கள் வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து கலாட்டாவில் ஈடுபட்டவர்களை தேடி வருகிறார்கள்.

    அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகள் மூலம் கலாட்டா செய்தவர்களை அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது. இது குடிபோதையில் நடந்த கலாட்டாவா? அல்லது பழி வாங்கும் நடவடிக்கையா? வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×