search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    சிவகாசி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி

    சிவகாசி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகன் விக்னேஷ்வரன் (வயது22). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த விக்னேஷ்வரன் தனது உறவினரை அழைப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சிவகாசி சென்றார். பஸ் நிலையத்தில் இருந்து அவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

    அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. எதிர் பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட விக்னேஷ்வரன் பலத்த காயம் அடைந்தார்.

    சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி பெற்ற பின்னர் மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித் தும் பலனின்றி இன்று காலை விக்னேஷ்வரன் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து சிவகாசி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராஜ்குமார், சப்-இன்ஸ் பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×