என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சொந்த ஊரில் தீபாவளியை கொண்டாடும் எடப்பாடி பழனிசாமி
Byமாலை மலர்25 Oct 2019 4:56 AM GMT (Updated: 25 Oct 2019 4:56 AM GMT)
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு சென்று குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளார்.
சேலம்:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவை வந்தார். பின்னர் அங்கிருந்து அவர் கார் மூலம் புறப்பட்டு தனது சொந்த ஊரான எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் சென்றார்.
அங்கு எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதையடுத்து அவர் சிலுவம்பாளையத்தில் இரவு தங்கினார்.
இன்று காலை சேலத்தில் நடந்த முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம் இல்ல திருமண நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றதையொட்டியும், டாக்டர் பட்டம் பெற்ற பிறகு முதல் முறையாக சேலம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர்.
தொடர்ந்து 28-ந்தேதி வரை 4 நாட்கள் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். நாளை மறுநாள் (27-ந் தேதி) தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு சென்று குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை எடப்பாடி பழனிசாமி கொண்டாட உள்ளார்.
28-ந்தேதி மாலை அவர் கார் மூலம் கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவை வந்தார். பின்னர் அங்கிருந்து அவர் கார் மூலம் புறப்பட்டு தனது சொந்த ஊரான எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் சென்றார்.
அங்கு எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதையடுத்து அவர் சிலுவம்பாளையத்தில் இரவு தங்கினார்.
இன்று காலை சேலத்தில் நடந்த முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம் இல்ல திருமண நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றதையொட்டியும், டாக்டர் பட்டம் பெற்ற பிறகு முதல் முறையாக சேலம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர்.
தொடர்ந்து 28-ந்தேதி வரை 4 நாட்கள் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். நாளை மறுநாள் (27-ந் தேதி) தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு சென்று குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை எடப்பாடி பழனிசாமி கொண்டாட உள்ளார்.
28-ந்தேதி மாலை அவர் கார் மூலம் கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X