என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடையாலுமூடு அருகே டியூசன் ஆசிரியையை கத்தியால் குத்திய மாணவர்
Byமாலை மலர்24 Oct 2019 2:08 PM GMT (Updated: 24 Oct 2019 2:08 PM GMT)
கடையாலுமூடு அருகே டியூசன் ஆசிரியையை தாக்கி கத்தியால் குத்திய மாணவர் போலீசில் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
கடையாலுமூடு பகுதியை சேர்ந்த பி.எஸ்.சி., பி.எட். பட்டதாரி பெண் ஒருவர் தனது வீட்டில் மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வருகிறார். அந்த பகுதியை சேர்ந்த சில மாணவர்கள் டியூசன் ஆசிரியை வீட்டிற்கு சென்று பாடம் படித்து வந்தனர். அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் ஒருவரும் ஆசிரியை வீட்டிற்கு டியூசனுக்கு சென்று வந்தார். நேற்று காலையில் டியூசன் ஆசிரியையின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டில் ஆசிரியை மட்டும் தனியாக இருந்தார்.
நேற்று அந்த பிளஸ்-1 மாணவர் பள்ளிக்கூடத்திற்கு செல்லவில்லை. இதனால் அவர் ஆசிரியை வீட்டிற்கு சென்று அவரிடம் பேசிக் கொண்டிருந்தார். ஆசிரியையும் மாணவரிடம் சகஜமாக பேசினார். அப்போது திடீர் என்று மாணவர் ஆசிரியையின் கையை பிடித்து இழுத்து அவரை தாக்கி உள்ளார்.
இதனால் பயந்து போன ஆசிரியை அலறினார். அவரது கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதை பார்த்ததும் மாணவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். மாணவர் தாக்கியதில் காயம் அடைந்த ஆசிரியை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேலும் அவர் மாணவர் மீது கடையாலுமூடு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் மாணவர் தனது வீட்டிற்கு வந்து தன்னை தாக்கி கத்தியால் குத்தியதாக கூறி உள்ளார்.
இதைத் தொடர்ந்து கடையாலுமூடு போலீசார் அந்த மாணவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறி வருவதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X