search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கோவை அருகே தாய் இறந்த துக்கத்தில் மெக்கானிக் தற்கொலை

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே தாய் இறந்த துக்கத்தில் மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    கோவை:

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சசிகுமார் (27). மெக்கானிக்.

    இவரது தாய் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். தாய் இறந்ததால் சசிகுமார் மிகுந்த மனவேதனை அடைந்தார்.

    இதன் காரணமாக அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த சசிகுமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பெரிய நாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சசிகுமாரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×