என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சசிகலா, தினகரனை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வாய்ப்பு உள்ளதா? -ஓ.பி.எஸ். பதில்
Byமாலை மலர்24 Oct 2019 6:11 AM GMT (Updated: 24 Oct 2019 6:11 AM GMT)
சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது தொடர்பாக கட்சியின் பொதுக்குழு முடிவு செய்யும் என துணை முதல்வர் ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
மதுரை:
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.
இதற்கிடையே, தமிழக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மதுரையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னிலை பெற்று அ.தி.மு.க. மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.
அப்போது, டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், இருவரையும் கட்சியில் சேர்ப்பது குறித்து கட்சியின் பொதுக்குழு முடிவு செய்யும் என்றார்.
ஆனால், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு, அதிமுகவில் ஒருபோதும் சேர மாட்டார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X