என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போனஸ் வழங்கக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்23 Oct 2019 10:59 AM GMT (Updated: 23 Oct 2019 10:59 AM GMT)
தீபாவளி முன் பணம், போனஸ் வழங்கக்கோரி மதுரையில் இன்று போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை:
தீபாவளி பண்டிகை வருகிற 27-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையையொட்டி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் போனஸ் வழங்கி வருகின்றன.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நாளை (வியாழக்கிழமை) 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை கிளையைச் சேர்ந்த தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பணிமனை முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பசுமலை, திருப்பரங்குன்றம், திடீர்நகர், எல்லீஸ்நகர், பொன்மேனி, கே.புதூர், உத்தங்குடி, சிப்காட்டில் உள்ள பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலூர் மெயின் ரோட்டில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழக டெப்போ முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
போனஸ் மற்றும் முன்பண தொகையை உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
தீபாவளி பண்டிகை வருகிற 27-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையையொட்டி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் போனஸ் வழங்கி வருகின்றன.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நாளை (வியாழக்கிழமை) 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை கிளையைச் சேர்ந்த தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பணிமனை முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பசுமலை, திருப்பரங்குன்றம், திடீர்நகர், எல்லீஸ்நகர், பொன்மேனி, கே.புதூர், உத்தங்குடி, சிப்காட்டில் உள்ள பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலூர் மெயின் ரோட்டில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழக டெப்போ முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
போனஸ் மற்றும் முன்பண தொகையை உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X