என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 26 பவுன் நகைகள் கொள்ளை
Byமாலை மலர்21 Oct 2019 8:38 AM GMT (Updated: 21 Oct 2019 8:38 AM GMT)
மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 26 பவுன் நகைகளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை:
மதுரை ரிங்ரோடு கிழக்கு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 32), ரியல் எஸ்டேட் அதிபர். இவர் வீட்டின் முதல் மாடியில் தாயாரை பார்க்க சென்றிருந்தார்.
அப்போது யாரோ ஜன்னல் வழியாக வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அவர்கள் பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடிச் சென்று விட்டனர்.
மாடியில் இருந்து கீழே வந்த வெங்கடேசன் பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பீரோவில் இருந்த 4 பவுன் கம்மல், 12 பவுன் செயின், 10 பவுன் வளையல் கொள்ளை போயிருப்பதாக வெங்கடேசன் தெரிவித்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்து 11 ஆயிரம் ஆகும். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் ஆள் இருக்கும்போதே மர்ம மனிதன் புகுந்து கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை ரிங்ரோடு கிழக்கு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 32), ரியல் எஸ்டேட் அதிபர். இவர் வீட்டின் முதல் மாடியில் தாயாரை பார்க்க சென்றிருந்தார்.
அப்போது யாரோ ஜன்னல் வழியாக வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அவர்கள் பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடிச் சென்று விட்டனர்.
மாடியில் இருந்து கீழே வந்த வெங்கடேசன் பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பீரோவில் இருந்த 4 பவுன் கம்மல், 12 பவுன் செயின், 10 பவுன் வளையல் கொள்ளை போயிருப்பதாக வெங்கடேசன் தெரிவித்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்து 11 ஆயிரம் ஆகும். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் ஆள் இருக்கும்போதே மர்ம மனிதன் புகுந்து கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X