search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கோவையில் திருமணமான 29 நாளில் புதுப்பெண் தற்கொலை

    கோவையில் குடும்ப தகராறு காரணமாக திருமணமான 29 நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கோவை:

    கோவை கணபதி அருகே உள்ள பாரதியார் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சத்யவாணி (வயது 25). தனியார் நிறுவன ஊழியர்.

    இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 29 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் மனவேதனை அடைந்த சத்யவாணி வாழ்க்கையில் விரக்தி அடைந்து கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட சத்யவாணியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமணமான 29 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×