என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடுதல் தண்ணீர் திறப்பு - வைகை ஆற்றில் மூழ்கி விவசாயி பலி
Byமாலை மலர்19 Oct 2019 8:47 AM GMT (Updated: 19 Oct 2019 8:47 AM GMT)
கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் மூழ்கி விவசாயி பலியானார்.
நிலக்கோட்டை:
மூல வைகையாற்று பகுதியில் பெய்த கன மழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது.
வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாய பாசனத்திற்காக 2030 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் ஏ. வாடிப்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிவேல் (வயது68). விவசாயி.
இவர் பெரியாறு பிரதான கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆண்டிவேலை தேடும் பணி நடைபெற்றது. நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். மட்டப்பாறை அருகே ஆண்டிவேலை பிணமாக மீட்டனர்.
தண்ணீரில் மூழ்கிய விவசாயி பலியாகி உள்ளார். அவரது உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விளாம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மூல வைகையாற்று பகுதியில் பெய்த கன மழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது.
வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாய பாசனத்திற்காக 2030 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் ஏ. வாடிப்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிவேல் (வயது68). விவசாயி.
இவர் பெரியாறு பிரதான கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆண்டிவேலை தேடும் பணி நடைபெற்றது. நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். மட்டப்பாறை அருகே ஆண்டிவேலை பிணமாக மீட்டனர்.
தண்ணீரில் மூழ்கிய விவசாயி பலியாகி உள்ளார். அவரது உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விளாம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X