என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அசோக்நகரில் கோவில் உண்டியலை திருடிய கொள்ளையன் கைது
Byமாலை மலர்18 Oct 2019 8:48 AM GMT (Updated: 18 Oct 2019 8:48 AM GMT)
சென்னை அசோக்நகரில் உள்ள கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:
சென்னை வடபழனி 100 அடி சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் மடக்கினர். அதில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
பிடிபட்ட வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவன் தண்டையார் பேட்டை பகுதியைச் சேர்ந்த கொள்ளையன் விஜய் (20) என்பது தெரிந்தது. அவனிடமிருந்து ரூ.12 ஆயிரம் ரொக்கம், கத்தி, கடப்பாரை, 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அசோக் நகர் திருவீதி அம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி விட்டு வந்ததாக தெரிவித்தான். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தப்பி ஓடிய அவனது கூட்டாளிகள் 2 பேரை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை வடபழனி 100 அடி சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் மடக்கினர். அதில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
பிடிபட்ட வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவன் தண்டையார் பேட்டை பகுதியைச் சேர்ந்த கொள்ளையன் விஜய் (20) என்பது தெரிந்தது. அவனிடமிருந்து ரூ.12 ஆயிரம் ரொக்கம், கத்தி, கடப்பாரை, 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அசோக் நகர் திருவீதி அம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி விட்டு வந்ததாக தெரிவித்தான். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தப்பி ஓடிய அவனது கூட்டாளிகள் 2 பேரை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X