search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பட்டாபிராம் பகுதியில் செல்போன் திருடிய 3 பேர் கைது

    ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஆவடி:

    ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியில் வீடு புகுந்து செல்போன் திருடும் சம்பவங்கள் நடந்து வந்தன.

    இதையடுத்து பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமி‌ஷனர் வெங்கடேசன் உத்தரவின்பேரில் திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் செல்போன் திருட்டு தொடர்பாக பட்டாபிராமை சேர்ந்த கரன் (23), ஜெகன் (20) கிருபாகரன் (20) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்ததில் செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டனர்.
    Next Story
    ×