search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கும்பகோணத்தில் வாகனம் மோதி வாலிபர் பலி

    கும்பகோணம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே உள்ள மேலக்காவேரி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 29). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் பாலக்கரையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண்குமார் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருண்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×