என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நம்பிக்கை துரோகம் செய்த திமுகவிற்கு பாடம் புகட்டுங்கள் - முதலமைச்சர் பழனிசாமி
Byமாலை மலர்16 Oct 2019 3:02 PM GMT (Updated: 16 Oct 2019 3:02 PM GMT)
விக்கிரவாண்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கை துரோகம் செய்த தி.மு.க.விற்கு பாடம் புகட்டுங்கள் என தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி:
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஆளும் கட்சியான அ.தி.மு.க. நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வி. நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் எம்.ஆர். முத்தமிழ்செல்வனும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டு உள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
முதற்கட்டமாக விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 12-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். முண்டியம்பாக்கத்தில் பிரச்சாரத்தை தொடங்கி, ராதாபுரம், விக்கிரவாண்டி பேரூராட்சி வி.சாத்தனூர், டி.புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி இரண்டாவது கட்டமாக இன்று மாலை காணை பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
நம்பிக்கை துரோகம் செய்த தி.மு.க.விற்கு பாடம் புகட்டுங்கள். அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுங்கள். தி.மு.க.வை நம்பி தமிழக பெண்கள் ஏமாந்து விட்டார்கள்.
நந்தன் கால்வாய் அமைக்க ரூ.40 கோடி ஒதுக்கி பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. அதனை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் ஆட்சியில் விவசாயிகள் பயன் பெறும் வகையில் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம் என குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X