search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    துடியலூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

    துடியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் ஆயிரத்து நூறு பணத்தை பறிமுதல் செய்தனர்.
    துடியலூர்:

    கோவை துடியலூர் அடுத்துள்ள சின்னதடாகம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தடாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சின்னதடாகம் வடக்கு வீதி அருகே வாலிபன் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓட முயன்றார். உடனே சுதாரித்துகொண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

    தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜங்கம் என்பவரின் மகன் ரவி என்பதும், தற்போது இங்குள்ள தனியார் செங்கல் சூளையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் இவரிடம் இருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் ஆயிரத்து நூறு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து ரவியை போலீசார் சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×