என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜீவ் கொலை வழக்கில் சீமானை சேர்க்க வேண்டும் - புதுவை காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்
Byமாலை மலர்15 Oct 2019 5:05 AM GMT (Updated: 15 Oct 2019 5:11 AM GMT)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சீமானையும் சேர்க்க வேண்டும் என புதுவை காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேசத்தை 21-ம் நூற்றாண்டுக்கு அழைத்து சென்ற இணையற்ற தலைவரும், வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவை ஏற்றம் பெறச்செய்த ஒப்பற்ற தலைவருமான ராஜீவ்காந்தியை கொன்று புதைத்தது எங்கள் கூட்டம்தான் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பொது மேடையில் பேசி இருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்.
அரசியல் விளம்பரத்துக்காக வெற்று கூச்சலிடும் சீமான் எங்கள் தலைவரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது? இந்திய நாட்டின் ஈடில்லா முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியை இன துரோகி என்று கூறும் சீமான் தமிழர்களின் உணர்வுகளை தூண்டி வியாபார அரசியல் செய்யும் உங்களுக்கு எங்கள் அன்பு தலைவரை பற்றி விமர்சிக்க துளிகூட தகுதி கிடையாது.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உடனடியாக கைது செய்ய வேண்டும். அரசு தீவிர விசாரணை நடத்தி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சீமானையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்.
ஏற்றமிகு தலைவர் ராஜீவ் காந்தியை தரமற்ற முறையில் விமர்சித்த சீமானின் கருத்தை தமிழர்கள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்திய நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு நமச்சிவாயம் அறிக்கையில் கூறியுள்ளார்.
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேசத்தை 21-ம் நூற்றாண்டுக்கு அழைத்து சென்ற இணையற்ற தலைவரும், வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவை ஏற்றம் பெறச்செய்த ஒப்பற்ற தலைவருமான ராஜீவ்காந்தியை கொன்று புதைத்தது எங்கள் கூட்டம்தான் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பொது மேடையில் பேசி இருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்.
அரசியல் விளம்பரத்துக்காக வெற்று கூச்சலிடும் சீமான் எங்கள் தலைவரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது? இந்திய நாட்டின் ஈடில்லா முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியை இன துரோகி என்று கூறும் சீமான் தமிழர்களின் உணர்வுகளை தூண்டி வியாபார அரசியல் செய்யும் உங்களுக்கு எங்கள் அன்பு தலைவரை பற்றி விமர்சிக்க துளிகூட தகுதி கிடையாது.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உடனடியாக கைது செய்ய வேண்டும். அரசு தீவிர விசாரணை நடத்தி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சீமானையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்.
ஏற்றமிகு தலைவர் ராஜீவ் காந்தியை தரமற்ற முறையில் விமர்சித்த சீமானின் கருத்தை தமிழர்கள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்திய நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு நமச்சிவாயம் அறிக்கையில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X