search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகி உள்ள நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரம் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அதற்கு அறிகுறியாக நேற்று சில மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது.

    இந்த நிலையில் இந்திய வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகி உள்ளது. இதனால் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
    Next Story
    ×