என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
படப்பை அருகே 2 வீடுகளில் கொள்ளை
படப்பை:
படப்பை அருகே உள்ள வரதராஜபுரம் முல்லை நகரை சேர்ந்தவர் ஜெகதீசன். ஓய்வு பெற்ற தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்.
இவரது மனைவிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள மனைவியை கவனிப்பதற்காக ஜெகதீசன் வீட்டை பூட்டி விட்டு சென்றார்.
நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் ஜெகதீசன் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை, ரூ.28 ஆயிரம் ரொக்கம், டி.வி., ஐபேட் உள்ளிட்ட பொருட்களை அள்ளிச் சென்றுவிட்டனர்.
இதேபோல் அதே பகுதி கிருஷ்ணாநகரில் டிரைவர் சுடலைமணி என்பவரது வீட்டிலும் 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து தப்பி விட்டனர்.
ஜெகதீசன் வீட்டின் எதிரே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளது. பட்டாகத்தி, கடப்பாறையுடன் வரும் அவர்கள் கொள்ளையடித்து தப்புவது பதிவாகி இருக்கிறது. இதனை வைத்து மணிமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்