search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    படப்பை அருகே 2 வீடுகளில் கொள்ளை

    படப்பை அருகே 2 வீடுகளில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    படப்பை:

    படப்பை அருகே உள்ள வரதராஜபுரம் முல்லை நகரை சேர்ந்தவர் ஜெகதீசன். ஓய்வு பெற்ற தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்.

    இவரது மனைவிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள மனைவியை கவனிப்பதற்காக ஜெகதீசன் வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

    நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் ஜெகதீசன் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை, ரூ.28 ஆயிரம் ரொக்கம், டி.வி., ஐபேட் உள்ளிட்ட பொருட்களை அள்ளிச் சென்றுவிட்டனர்.

    இதேபோல் அதே பகுதி கிருஷ்ணாநகரில் டிரைவர் சுடலைமணி என்பவரது வீட்டிலும் 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து தப்பி விட்டனர்.

    ஜெகதீசன் வீட்டின் எதிரே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளது. பட்டாகத்தி, கடப்பாறையுடன் வரும் அவர்கள் கொள்ளையடித்து தப்புவது பதிவாகி இருக்கிறது. இதனை வைத்து மணிமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×