என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட்ட திபெத்தியர்கள் 5 பேர் கைது
Byமாலை மலர்11 Oct 2019 6:32 AM GMT (Updated: 11 Oct 2019 6:32 AM GMT)
சென்னை வரும் சீன அதிபர் ஜின்பின்கின் வருகைக்கு எதிராக முழக்கமிட்ட 5 திபெத்தியர்களை காவல் துறை கைது செய்தது.
சென்னை:
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான முறைசாரா சந்திப்பு கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் பகுதியில் நடந்தது. அதைத்தொடர்ந்து, இரண்டாவது முறைசாரா சந்திப்பு சென்னை அருகே உள்ள கடலோர நகரமான மாமல்லபுரத்தில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.
இந்த சந்திப்புக்காக சீனாவில் இருந்து புறப்பட்ட அதிபர் ஜி ஜின்பிங் இன்று மதியம் சென்னை வந்து சேருகிறார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு செல்கிறார்.
இந்நிலையில், சீன அதிபர் தங்க உள்ள கிண்டி ஐ.டி.சி கிராண்ட் சோழா ஹோட்டல் அருகே அதிபர் ஜின்பின்கிற்கு எதிராக முழக்கமிட்ட 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலத்த பாதுகாப்பையும் மீறி ஹோட்டல் அருகே போராட்டம் நடந்ததால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X