search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    3-வது மாடியில் இருந்து விழுந்து 1½ வயது குழந்தை பலி

    பால்கனியில் நின்று தாய் சாப்பாடு கொடுத்தபோது 3-வது மாடியில் இருந்து விழுந்த 1½ வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ராயபுரம்:

    கொண்டித்தோப்பு, சரவணமுதலி தெருவை சேர்ந்தவர் அருண். பாரிமுனையில் ஜவுளிக்கடை வைத்து உள்ளார். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்களது 1½ வயது மகள் பூமி. இவர்கள் 3-வது மாடியில் வசித்து வந்தனர்.

    நேற்று மாலை ஜெயஸ்ரீ குழந்தை பூமிக்கு பால்கனியில் நின்றபடி சாப்பாடு கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது குழந்தை சாப்பாடு உண்ண மறுத்து அடம் பிடித்தது.

    திடீரென தாயின் கையில் இருந்த குழந்தை பூமி 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தது. இதனை கண்டு ஜெயஸ்ரீ அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.

    உடனடியாக குழந்தை பூமியை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.

    இதுகுறித்து ஏழுகிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாய் கண் முன்பே குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×