என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அண்ணாநகரில் வீடு புகுந்து 42 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்3 Oct 2019 10:50 AM GMT (Updated: 3 Oct 2019 10:50 AM GMT)
மதுரை அண்ணாநகரில் வீடு புகுந்து 42 பவுன் நகையை திருடியதாக 2 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை அண்ணாநகர் 6-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 57). இவரது வீட்டில் கார் டிரைவராக வேலை பார்ப்பவர் ராஜேந்திரன்.
சம்பவத்தன்று குமரேசன் வெளியூர் சென்றிருந்தார். அந்த நேரத்தில் ராஜேந்திரன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் ஆகியோர் வீடு புகுந்து 42 பவுன் நகையை திருடிச் சென்றதாக அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொக்கிக்குளம் வல்லபாய் தெருவைச் சேர்ந்தவர் அஜய் (29). இவரது வீட்டின் பீரோவில் இருந்த ரூ.24 ஆயிரம் திடீரென மாயமானது.
இது குறித்து தல்லாகுளம் போலீசில் அவர் புகார் செய்தார். அதில், வீட்டில் வேலை பார்த்த கரும்பாலையைச் சேர்ந்த முருகேஸ்வரி என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோரிப்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நெல்லை மாவட்டம், பேட்டையைச் சேர்ந்த சுதர்சன் (20) 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
அவர் மகாத்மா காந்தி நகர், வைகை நதி தெருவில் நண்பர்களுடன் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். அந்த வீட்டில் இருந்த ரூ.70 ஆயிரம் மதிப்பிலான 5 செல்போன்களை யாரோ திருடிச் சென்றிருப்பதாக கூடல்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அண்ணாநகர் 6-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 57). இவரது வீட்டில் கார் டிரைவராக வேலை பார்ப்பவர் ராஜேந்திரன்.
சம்பவத்தன்று குமரேசன் வெளியூர் சென்றிருந்தார். அந்த நேரத்தில் ராஜேந்திரன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் ஆகியோர் வீடு புகுந்து 42 பவுன் நகையை திருடிச் சென்றதாக அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொக்கிக்குளம் வல்லபாய் தெருவைச் சேர்ந்தவர் அஜய் (29). இவரது வீட்டின் பீரோவில் இருந்த ரூ.24 ஆயிரம் திடீரென மாயமானது.
இது குறித்து தல்லாகுளம் போலீசில் அவர் புகார் செய்தார். அதில், வீட்டில் வேலை பார்த்த கரும்பாலையைச் சேர்ந்த முருகேஸ்வரி என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோரிப்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நெல்லை மாவட்டம், பேட்டையைச் சேர்ந்த சுதர்சன் (20) 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
அவர் மகாத்மா காந்தி நகர், வைகை நதி தெருவில் நண்பர்களுடன் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். அந்த வீட்டில் இருந்த ரூ.70 ஆயிரம் மதிப்பிலான 5 செல்போன்களை யாரோ திருடிச் சென்றிருப்பதாக கூடல்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X