என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி? -விருப்ப மனு தாக்கல் செய்தார் கவுதம சிகாமணி
Byமாலை மலர்23 Sep 2019 8:26 AM GMT (Updated: 23 Sep 2019 10:23 AM GMT)
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டி கவுதம சிகாமணி எம்பி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
விழுப்புரம்:
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. 2 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது. தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. இந்த இடைத்தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. போட்டியிட விரும்புவோர் தங்கள் கட்சி தலைமையகத்தில் விருப்பமனுக்களை வழங்கி வருகின்றனர்.
இதேபோல் நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் விருப்ப மனு பெற்றுள்ளார். எனவே, காங்கிரஸ் சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என பேசப்படுகிறது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. 2 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது. தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. இந்த இடைத்தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. போட்டியிட விரும்புவோர் தங்கள் கட்சி தலைமையகத்தில் விருப்பமனுக்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடவேண்டும் என விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான பொன்.கவுதம சிகாமணி, அண்ணா அறிவாலயத்தில் இந்த விருப்ப மனுவை அளித்துள்ளார்.
எனவே, உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. விக்கிரவாண்டி தொகுதிக்கான வேட்பாளரை மு.க.ஸ்டாலின் நாளை அறிவிக்க உள்ளார்.
இதேபோல் நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் விருப்ப மனு பெற்றுள்ளார். எனவே, காங்கிரஸ் சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என பேசப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X