search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சங்கரன்கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

    சங்கரன்கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 6 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கதிர்காமு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு மரத்தடியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பியோடினர். எனினும் போலீசார் அவர்களை விரட்டி சென்றனர்.

    இதில் தேவர்குளத்தை சேர்ந்த சீனிபாண்டி (வயது 60), வன்னிகோனேந்தலை சேர்ந்த செந்தில் செல்வன் (48), தெற்கு பனவடலிசத்திரத்தை சேர்ந்த வெளியப்பன் (51) ஆகிய 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் 6 மோட்டார் சைக்கிள்களையும், ரூ. 8 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய விஜயகுமார் உள்ளிட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×