என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காடு அருகே டிரைவர் மீது தாக்குதல்: அண்ணன், தம்பிக்கு வலைவீச்சு
Byமாலை மலர்18 Sep 2019 3:06 PM GMT (Updated: 18 Sep 2019 3:06 PM GMT)
களக்காடு அருகே முன்விரோத தகராறில் டிரைவரை தாக்கிய அண்ணன், தம்பியை போலீசார் தேடி வருகிறார்கள்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மேலதேவநல்லூர் வேலவன்குடியிருப்பை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் சக்திவேல் (வயது 38). டிரைவர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த குசலவன் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று குசலவன் மகன்கள் முத்து, பொன்பாண்டி ஆகியோர் சக்திவேல் வீடு வழியாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சக்திவேல் வளர்த்து வரும் நாய் அவர்களை பார்த்து சத்தம் போட்டது. இதனால் அவர்கள் இருவரும் நாயின் மீது கற்களை வீசினர். இதைப்பார்த்த சக்திவேல் நாய் மீது கற்களை வீசியதை தட்டிக் கேட்டார்.
இதையடுத்து ஆத்திரம் அடைந்த முத்து, பொன்பாண்டி ஆகியோர் சக்திவேலை கம்பால் தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன், தம்பியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X