search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர் மீது தாக்குதல்"

    • சமூக வலை தளங்களில் வீடியோ காட்சிகள் பரவல்
    • 11-ம் வகுப்பு மாணவரிடம் போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கரிலிருந்து அரக்கோணத்திற்கு அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது.

    அந்த பஸ் பாண்டிய நல்லூர்போடப் பாறை அருகே சென்று கொண்டிருந்தபோது அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் படிக்கட்டில் நின்றவாறு வந்தார்.

    அவரை டிரைவர் பாலாஜி கண்டித்து உள்ளே வருமாறு கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவன் டிரைவர் பாலாஜியை தாக்கியதாக கூறப்படுகிறது.

    அவருக்கு நெற்றிப்பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதை வீடியோ பதிவு செய்து சமூக வலை தளங்களில் பொதுமக்கள் வெளியிட்ட நிலையில், வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவரிடம் போலீசார் விசாரணை செய்ய உள்ளனர்.

    • மதுபோதையில் அட்டகாசம்
    • 3 பேருக்கு வலைவீச்சு

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த ரெண்டா டியை சேர்ந்தவர் தீனன் (வயது 51). இவர் சோளிங்கர் பணிம னையில் வேலூர் திருத்தணி செல்லும் பஸ்சில் கண்டக்ட ராக பணியாற்றி வருகிறார். டிரைவராக பெருங்காஞ்சியை சேர்ந்த பாலன் உள்ளார்.

    நேற்று முன்தினம் இரவு வேலூரில் இருந்து சோளிங்கர் வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு இரவு 9.45 மணிக்கு திருத்த ணிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சோளிங்கர் பஸ் நிலையத்தில் மதுபோதையில் ஏறிய 3 பேர் பாட்டிகுளம் பகுதியில் செல்லும்போது வெள்ளாத் தூரில் பஸ் நிறுத்த வேண்டும் என்று கூறினர்.

    இது விரைவு பஸ் என்பதால் அங்கு நிற் காது என கண்டக்டர் தீனன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கண்டக்டரையும், டிரைவரையும் ஆபாசமாக திட்டி, பயணிகள் முன்னிலையில் சரமாரியாக தாக்கினார்.

    பின்னர் இது குறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் தீனன் புகார் மனு அளித்தார். அந்த புகாரில் என்னையும், டிரைவரையும் தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர். போலீசார் 3 பேரை தேடி வருகின்றனர்.

    • 2 பேருக்கு வலைவீச்சு
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரிலிருந்து ஆற்காட் டிற்கு செல்லும் அரசு டவுன் பஸ் கடந்த சில நாட்களாக தகரக்குப்பம் கிராமத்திற்கு சென்று ஆற்காட்டுக்கு செல்கிறது.

    நேற்று காலை சோளிங்கரிலிருந்து ஆற்காட்டிற்கு ரெண் டாடி வழியாக சென்று தகர குப்பம் கிராமத்திற்குள் சென்று திரும்பி வந்தது.

    அப்போது தகரகுப்பம் பஸ் நிலையம் அரு கில் பஸ்சில் ஏறிய 2 பேர் பஸ் தகரகுப்பம் சென்று வருவதால் எங்களுக்கு இடம் இல்லை என்று டிரைவர் பாஸ்கருடன் (55) தகராறு செய்து அவரை தாக்கி உள்ளனர்.

    உடனடியாக சோளிங்கர் பணிமனைக்கு தகவல் கொடுத்து வேறு டிரைவரை பஸ்சை ஓட்டி சோளிங்கர் வரவைத்து சென்றனர்.

    பாஸ்கர் சோளிங் கர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் டிரை வர் பாஸ்கர் புகார் கொடுத் தார். அதன்பேரில் சப் - இன்ஸ் பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×