என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தளி அருகே சாமி சிலைகள் உடைப்பு
Byமாலை மலர்17 Sep 2019 4:23 PM GMT (Updated: 17 Sep 2019 4:23 PM GMT)
தளி அருகே நள்ளிரவில் சாமி சிலைகளை சமூக விரோதிகள் கடப்பாறையால் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
தேன்கனிகோட்டை:
தேன்கனிகோட்டை வட்டம் தளி அருகே உள்ள உலி வீரணப்ஹிள்ளி கிராமத்தில் பஸ்நிலையம் அருகில் அரசமரத்தடியில் நாகர் சிலைகள் உள்ளது. இதனை அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் பூஜைசெய்து வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சமூக விரோதிகள் சிலர் மூன்று நாகர்சிலைகளை கடப்பாறையால் உடைத்து பெயர்த்துள்ளனர்.
இதேப்போல் இப்பகுதி கோகுல் ஆசிரமம் அருகில் இருந்த 8 நவகிரக சிலைகளையும் அடியோடு பெயர்த்து உடைத்துள்ளனர். சிலைகள் உடைத்திருந்தது கண்ட பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர். பின்னர் அப்பகுதியில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் திரண்டனர்.
இது குறித்து மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரில் சாமிசிலைகளை உடைத்த சமூக விரோதிகளை கண்டு பிடித்து கைது செய்து, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X