search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக விரோதிகள்"

    • பெரிய ஏரிக்கு தண்ணீர் வராமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • தண்ணீர் குறைய குறைய நீர்மட்டமும் குறையும்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் இருந்து திருக்கோவிலூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்லும் வரத்து வாய்க்கால் உள்ளது. கடந்த சில தினங்களாக சமூக விரோத கும்பலைச் சேர்ந்த சிலர் இந்த வாய்க்காலில் அடைப்பு ஏற்படுத்தி, பெரிய ஏரிக்கு தண்ணீர் வராமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தென்பெண்ணை ஆற்றில் தற்போது மழை நீர் ஓடுகிறது. இந்த நீரை ஏரியில் தேக்கி விவசாயத்திற்கு பயன்படு த்தலாம் என விவசாயிகள் விரும்புகின்றனர். அதேசமயம் மீன் குத்தகை எடுத்தவர்கள் ஏரியில் தண்ணீர் நிரம்புவதை விரும்பவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஏரியில் தண்ணீர் நிரம்பினால் மீன்பிடிப்பது கஷ்டம் எனவும், தண்ணீர் குறைவாக இருக்கும் போது தான் மீன் பிடிக்க முடியும் எனவும் குத்தகைதாரர்கள் விரும்புகின்றனர். அதனால் தான் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் ஓடுகின்ற போதும் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாத ஒரு நிலை காணப்படுகிறது. இதனால் விவசாயம் பாதிக்கின்ற நிலையும் உருவாகியுள்ளதாக விவ சாயிகள் புலம்புகின்றனர். மேலும், திருக்கோ விலூர் பெரிய ஏரியில் தண்ணீர் தேங்கி இருக்கும் போது திருக்கோவிலூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். தண்ணீர் குறைய குறைய நீர்மட்டமும் குறையும். இவ்வளவு பிரச்சனைகள் உள்ள நிலையில் ஏரிக்கு தண்ணீர் வரக்கூடிய வரத்து வாய்க்காலில் சிமெண்ட் கட்டைகள் மூலம் தடுப்பு ஏற்படுத்திய சமூக விரோத கும்பல் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏர்வாடியில் யாத்ரீகர்கள் போர்வையில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
    • கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் புகழ் பெற்ற பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அனைத்து சமூக மக்களும் வேண்டுதலுக்காக தர்காவிற்கு குடும்பத்துடன் வந்து தங்கி செல்கின்றனர்.

    இதை சாதகமாக்கும் வெளிமாநில சமூக விரோதிகளும் பக்தர்கள், மன நோயாளிகள் போர்வையில் தங்கி உள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் தர்கா வளாகத்தில் தனி நபர்களாக ஏராளமான ஆண்கள் வலம் வருகின்ற னர். இவர்களை தர்கா நிர்வாகத்தினர் அடையா ளம் கண்டு விசாரித்து வெளி யேற்றினாலும் பக்தர்கள் போர்வையில் மீண்டும் தர்கா வளாகத்தில் புகுந்து தங்கி வருகின்றனர். பல்வேறு அசம்பாவித சம்பவங்கள், திருட்டுக்கள் நடந்தும் வழக்கு விசார ணைக்கு பயந்து போலீசா ரிடம் பக்தர்கள் புகார் தெரிவிப்பது கிடையாது.

    பிற மாநில போலீசாருக்கு 'டிமிக்கி' கொடுத்து ஏர்வாடி யில் தங்கி வந்த பல சமூக விரோதிகளை வெளிமாநில போலீசார் தர்கா வளா கத்தில் ஏற்கனவே பிடித்து சென்றனர். தர்கா நிர்வாகத்தினரின் தீவிர கண்காணிப்பு காரண மாக தற்போது காட்டு பள்ளிவாசல் பகுதிக்கு சென்று விடுகின்றனர். ஏர்வாடியில் கூடுதல் போலீ சார் நியமித்து சந்தேகத்திற் குரிய விடுதிகளில் ஆய்வு மேற்கொள்வ துடன், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் நகை பறிப்பு- வழிப்பறியில் ஈடுபடும் சமூக விரோதிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • பால்சுணை கண்ட சிவன் கோவில், அரசு சுற்றுச்சூழல் பூங்கா, மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் வழி உள்ளது.

    மதுரை

    மதுரையில் உள்ள முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்க ணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக பவுர்ணமியன்று ஆயிரக்கணக்கானோர் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வது உண்டு.

    திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் பால்சுணை கண்ட சிவன் கோவில் மற்றும் அரசு சுற்றுச்சூழல் பூங்கா, மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் வழி உள்ளது. இங்கு தினமும் திரளானோர் வந்து செல்கின்றனர். இந்த பூங்காவிற்கு மதுரை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர்.

    விசேஷ நாட்கள் தவிர மற்ற நேரங்களில் திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் ஆட்கள் நடமாட்டம் மிக மிக குறைவாக இருக்கும். போலீசாரும் கண்டு கொள்ளாததால் அந்தப்பகுதி தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

    மது, கஞ்சா அடித்து சுற்றித்திரியும் இவர்கள் அந்த வழியாக செல்லும் நபர்களை குறிவைத்து பணம், நகை, செல்போன் பறிப்பு போன்ற செயல்களில் துணிகரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்தப்பகுதியில் பொதுமக்கள் செல்லவே அச்சமடைந்துள்ளனர். போலீசார் தீவிர ரோந்து சென்று சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏரிகளில் படிந்துள்ள வண்டல் மண் மற்றும் களிமண் ஆகியவற்றை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
    • சமூக விரோதிகள் திருட்டுத்தனமாக எடுத்துச்சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்து ள்ளதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களை செம்மைப்படுத்தவும் மற்றும் பொதுமக்களின் இதர பயன்பாட்டிற்காக தங்களது கிராமம் அல்லது அருகாமையில் உள்ள கிராமங்களில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் படிந்துள்ள வண்டல் மண் மற்றும் களிமண் ஆகியவற்றை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

    அதில் விவசாயிகள் நஞ்சை நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 டிராக்டர் லோடுகளும், புஞ்சை நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 டிராக்டர் ரோடுகளும், வீட்டு பயன்பாட்டிற்கு 10 டிராக்டர் லோடுகளும், மண்பாண்டம் தொழில் செய்ய 20 டிராக்டர் லோடு அளவிற்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை விலை இல்லாமல் பெற்று பயன் அடையலாம் என கூறப்பட்டது. மேலும் இவ்வாறு மண் அடிக்கும் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் சிட்டா அடங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து வருவாய் ஆய்வாளர் பரிந்துரையின் பேரில் வருவாய் கோட்டா ட்சியரிடம் அனுமதி பெற்று மண் அடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலத்தில் சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் வண்டல் மண் அடிக்க ஒரே ஒரு விவசாயி மட்டுமே அனுமதி பெற்றுள்ளார். ஆனால் சமூக விரோதிகள் பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் இரவு நேரங்களில் வருவாய்துறையினரிடம் அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக கிராவல் மண் அடித்து வருகின்றனர். இவ்வாறு கிராவல் மண் அள்ளும் சமூக விரோதிகள் ஏரி பகுதியில் ஊருக்கு அருகே உள்ள பகுதியில் அதிக ஆழமாக அள்ளுவதாகவும், இவ்வாறு கிராவல் மண் அள்ளுவதால் மழை காலங்களில் குழந்தைகள் தண்ணீரில் மூழ்க வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். மேலும் சமூக விரோதிகள் கிராவல் மண்ணை கள்ளக்குறிச்சி, உலகங்காத்தான், தச்சூர் ஆகிய பகுதிக்கு எடுத்து ச்சென்று விற்பனை செய்வதாகவும், மலைக்கோட்டாலம், விளம்பாவூர் பகுதியை சேர்ந்த சிலர் செங்க ல்சூலைக்கு அனுமதியின்றி வண்டல் மண் அள்ளிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவ்வாறு ஏரியில் அனுமதியின்றி 1000- க்கும் மேற்பட்ட நடை கிராவல் மண் மற்றும் வண்டல் மண்ணை சமூக விரோதிகள் திருட்டுத்தனமாக எடுத்துச்சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்து ள்ளதாக கூறப்படுகிறது.

    இவ்வாறு ஏரியில் சுமார் 10 அடி ஆழம் வரை மண் எடுப்பதாலும், ஏரியில் பல்வேறு இடங்களில் மண் எடுப்பதாலும் ஆடு, மாடுகளை கூட ஏரியில் மேய்க்க முடியாமலும், ஆடு மாடுகள் வந்து செல்லக்கூட வழி இல்லாமல் அவதிப்படுவதாகவும், ஏரியின் அமைப்பு உருக்குலைந்து காணப்படு வதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் சமூக விரோதிகள் அனுமதியின்றி மண் எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாகவும், இதனால் அதிகாரிகள் சமூக விரோதிகள் மண் அடிப்பதை கண்டு கொள்வதில்லை என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இவ்வாறு பெரிய ஏரியில் மணல் கொள்ளை தொடர்ந்தால் அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் கூறுகின்றனர்.

    எனவே மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் நேரில் சென்று ஆய்வு செய்து இதுவரை எத்தனை பேர் வண்டல் மண் அடிக்க அனுமதி பெற்றுள்ளனர், இந்த ஏரியில் இருந்து மண் வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறதா? ஏரியில் எவ்வளவு மண் அள்ளப்பட்டுள்ளது. இந்த ஏரியில் மண் அள்ளும் பள்ளத்தால் குழந்தைகள் மற்றும் ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு பாதிப்பு உள்ளதா? சமூகவி ரோதிகள் திருட்டுத்தனமாக மண் அள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளனரா? என்பது குறித்து விசாரணை செய்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்க எடுக்க வேண்டும் என இல.கணேசன் கூறினார். #ilaganesan #tuticorinfiring

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் ராஜாக்க மங்கலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்.பி. கலந்து கொண்டார். அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் அந்த போராட்டம் துப்பாக்கி சூட்டில் முடிவடைந்தது. அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சமூகவிரோதிகள் யார்? என்பதையும், அவர்களை தூண்டிவிட்டவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும்.

    சமூகவிரோதிகளை தூண்டி விட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது அனுதாபம் காட்ட வேண்டும். மேலும் இந்த போராட்டத்துக்கு தொடர்பு இல்லாதவர்களும் இதில் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடும், மறுவாழ்வும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் பாரதீய ஜனதா வெற்றி பெறுவதற்கான திட்டம் பற்றி தேசிய தலைவர் அமித்ஷா ஆலோசனைகள் வழங்கி உள்ளார். அவரது ஆலோசனைப்படி அதற்கான திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.

    தற்போது அது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் 42 அமைப்பு மாவட்டங்களில் தற்போது மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு தேர்தலை நோக்கிய பயணத்திட்டம் பற்றி விளக்கப்பட்டு வருகிறது.

    மத்திய அரசின் சாதனை திட்டங்களை தமிழக மக்களிடம் பாரதீய ஜனதா கொண்டு செல்லும். அதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு வியூகம் வகுத்து செயல்படமுடியும். விலை மதிக்கமுடியாத ராஜராஜ சோழன் சிலை மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகளை பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #ilaganesan #tuticorinfiring

    ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை சமூக விரோதிகள் என்பதா? இதற்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தடியடியில் காயம் அடைந்தவர்கள் ஆவேசமாக கூறினர். #SterliteProtest #Rajinikanth
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் கடந்த 22-ந்தேதி நடந்தது. அப்போது வன்முறை ஏற்பட்டது. இதனால் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியாயினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். நேற்று முன்தினம் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

    அங்கு காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். பின்னர் ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறுகையில், போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்துக்கு சமூக விரோதிகளே காரணம் என்று கூறினார். ரஜினிகாந்தின் இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை சமூக விரோதிகள் என்று கூறியதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர் ரஜினிகாந்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


    இந்த நிலையில் போலீஸ் தடியடியில் காயம் அடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் ரஜினிகாந்த் கருத்து குறித்து ஆவேசமாக பதிலளித்தனர்.

    தேவர் காலனியைச் சேர்ந்த பூல்பாண்டி என்பவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஈடுபட்டுள்ளதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் முதலில் பேட்டி கொடுத்து விட்டு, அதன்பிறகு பணம் கொடுத்து இருந்தால் அந்த பணத்தை வாங்கி இருக்க மாட்டோம். எங்களிடம் நன்றாக பேசிவிட்டு, ஆஸ்பத்திரிக்கு வெளியில் இப்படி பேட்டி கொடுத்தது வருத்தம் அளிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய எங்களை சமூக விரோதிகள் என்பதா? இதற்கு அவர், வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தடியடியில் காயம் அடைந்த பிளஸ்-2 முடித்த மாணவி பினோலின் பிரியங்கா கூறுகையில், “நாங்கள் அமைதியான முறையில் போராடினோம். போராட்டத்துக்கு சிறு குழந்தைகளையும் அழைத்துச் சென்றோம். வன்முறையில் ஈடுபடுவதாக இருந்தால் நாங்கள் குழந்தைகளை ஏன் அழைத்துச் செல்ல வேண்டும்.

    எங்களது போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ரஜினிகாந்த், சமூக விரோதிகள் என்று கூறியுள்ளார். இது தேவை இல்லாத வார்த்தை. இந்த மனநிலையில் அவர் எங்களை சந்தித்து இருக்க கூடாது. போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகும் என்கிறார் ரஜினிகாந்த். போராட்டம் நடத்தினால்தான் தமிழகம் நல்ல மாநிலம் ஆகும். எங்களை சமூக விரோதிகள் என்று கூறியதற்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்றார்.


    10-ம் வகுப்பு மாணவி டிசானி கூறுகையில், “நான் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளேன். ரஜினிகாந்த் சாரை பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. எனது முதுகில் தட்டிக்கொடுத்து பேசினார். ஆனால், ஆஸ்பத்திரிக்கு வெளியே சென்ற பிறகு, எங்களது போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் சமூக விரோதிகள் என்று கூறியுள்ளார். இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள்தான் போராடினோம். சமூக விரோதிகள் யாரும் போராடவில்லை. நாங்கள் குடும்பமாக சென்றுதான் போராடினோம். அந்த வார்த்தையை அவர் கூறியிருக்க கூடாது. அவர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்றார்.

    திரேஸ்புரத்தைச் சேர்ந்த எடிட்சன் கூறுகையில், “கடந்த 22-ந்தேதி நடந்த சம்பவத்தின்போது போலீசார் என்னை கைது செய்து வல்லநாடு, புதுக்கோட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் வைத்து இருந்தனர். அதன்பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளேன். தடியடி சம்பவத்தில் எனக்கு காயம் இருப்பதால் நான் ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளேன். ரஜினிகாந்தின் இந்த கருத்து எனக்கு ஆச்சரியமாக உள்ளது. சமூக விரோதிகள் யாரும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபடவில்லை. போராட்டம் நடந்தால்தான் நல்ல தமிழ்நாடு உருவாகும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் நாங்கள் இதைவிட வேகமாக போராடுவோம். எங்களை சமூக விரோதிகள் என்று கூறியதற்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்று ஆவேசமாக கூறினார். #SterliteProtest #Rajinikanth
    ×