search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூக விரோதிகள் யார்? என்று ரஜினியிடம் விசாரிக்க வேண்டும் கமி‌ஷனர் ஆபீசில் புகார்
    X

    சமூக விரோதிகள் யார்? என்று ரஜினியிடம் விசாரிக்க வேண்டும் கமி‌ஷனர் ஆபீசில் புகார்

    ஸ்டெர்லைட் போராட்டத்தில் புகுந்த சமூக விரோதிகள் யார்? என்று ரஜினியிடம் விசாரிக்க வேண்டும் என்ற கமி‌ஷனர் ஆபீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டதாக குற்றம் சாட்டிய ரஜினிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    சமூக விரோதிகள் யார்? என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

    இந்த நிலையில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று ரஜினி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேவராஜ் என்பவர் அளித்த புகாரில் கூறி இருப்பதாவது:-


    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி இருப்பதாக ரஜினி கூறி உள்ளார்.

    இதுபற்றி அவரிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும். அப்போது அது போன்று எதுவும் இல்லை என்பது தெரியவந்தால் பொய் பிரசாரம் செய்ததாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    காலா படத்துக்கு என்ன விலையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #SterliteProtests #Rajinikanth
    Next Story
    ×