என் மலர்
நீங்கள் தேடியது "River water"
- நதிநீர் நிறுத்தம் பாகிஸ்தானின் விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்
- பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், தண்ணீரை நிறுத்தும் எந்தவொரு முயற்சியையும் போர் நடவடிக்கை என்று தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நதிநீர் தடுக்கப்பட்டது.
இந்நிலையில் சிந்து நதியின் நீரை இந்தியாவிற்குத் திருப்பிவிடுவதற்காக கட்டப்படும் எந்தவொரு கட்டமைப்புகளும் அழிக்கப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார்.
ஜியோ நியூஸ் ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர், பாகிஸ்தானின் பங்கான தண்ணீரை இந்தியா திருப்பிவிட முயற்சிப்பது அவர்களின் நாட்டின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று கூறினார்.
"இந்தியா அத்தகைய கட்டமைப்பை (அணையை) உருவாக்க முயற்சித்தால், பாகிஸ்தான் அதை அழித்துவிடும்" என்று ஆசிப் கூறினார்.
நதிநீர் நிறுத்தம் பாகிஸ்தானின் விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், நீண்டகால சேதத்தை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர். இந்தச் சூழலில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், தண்ணீரை நிறுத்தும் எந்தவொரு முயற்சியையும் போர் நடவடிக்கை என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரி, சிந்து நதியில் தண்ணீர் ஓடவில்லை என்றால், இரத்தம் ஓடும் என்று தெரிவித்திருந்தார்.
- பெரிய ஏரிக்கு தண்ணீர் வராமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- தண்ணீர் குறைய குறைய நீர்மட்டமும் குறையும்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் இருந்து திருக்கோவிலூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்லும் வரத்து வாய்க்கால் உள்ளது. கடந்த சில தினங்களாக சமூக விரோத கும்பலைச் சேர்ந்த சிலர் இந்த வாய்க்காலில் அடைப்பு ஏற்படுத்தி, பெரிய ஏரிக்கு தண்ணீர் வராமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தென்பெண்ணை ஆற்றில் தற்போது மழை நீர் ஓடுகிறது. இந்த நீரை ஏரியில் தேக்கி விவசாயத்திற்கு பயன்படு த்தலாம் என விவசாயிகள் விரும்புகின்றனர். அதேசமயம் மீன் குத்தகை எடுத்தவர்கள் ஏரியில் தண்ணீர் நிரம்புவதை விரும்பவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏரியில் தண்ணீர் நிரம்பினால் மீன்பிடிப்பது கஷ்டம் எனவும், தண்ணீர் குறைவாக இருக்கும் போது தான் மீன் பிடிக்க முடியும் எனவும் குத்தகைதாரர்கள் விரும்புகின்றனர். அதனால் தான் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் ஓடுகின்ற போதும் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாத ஒரு நிலை காணப்படுகிறது. இதனால் விவசாயம் பாதிக்கின்ற நிலையும் உருவாகியுள்ளதாக விவ சாயிகள் புலம்புகின்றனர். மேலும், திருக்கோ விலூர் பெரிய ஏரியில் தண்ணீர் தேங்கி இருக்கும் போது திருக்கோவிலூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். தண்ணீர் குறைய குறைய நீர்மட்டமும் குறையும். இவ்வளவு பிரச்சனைகள் உள்ள நிலையில் ஏரிக்கு தண்ணீர் வரக்கூடிய வரத்து வாய்க்காலில் சிமெண்ட் கட்டைகள் மூலம் தடுப்பு ஏற்படுத்திய சமூக விரோத கும்பல் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாமிரபரணி புஷ்கர விழாவிற்காக விஷ்வ இந்து பரிஷத் சார்பில் இந்தியா முழுவதும் உள்ள 12 நதிகளில் இருந்து புனித நீர் சேகரிக்கப்பட்டது.
இந்த நீர் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு 12 ரதங்களில் வைத்து முக்கிய மாவட்டங்களில் பொது மக்கள் சிறப்பு பூஜைக்காக சுற்றி வந்தது. இந்த ரதம் இன்று மாலை சங்கர் நகர் கொண்டு வரப்படுகிறது. அங்கு பா.ஜ.க., மடாதிபதிகள், புஷ்கர விழா குழுவினர் வரவேற்கின்றனர்.
பின்னர் இது நெல்லை, பாளை மாநகர் முழுவதும் சுற்றி வருகிறது. இதனை தொடர்ந்து நாளை காலை பாபநாசம் கொண்டு செல்லப்பட்டு புனிதநீரை தாமிரபரணி ஆற்றில் விட்டு அபிஷேகம் செய்கின்றனர்.






