என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவொற்றியூர் மெட்ரோ ரெயில் தூணில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்17 Sep 2019 8:19 AM GMT (Updated: 17 Sep 2019 8:19 AM GMT)
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயிலுக்காக அமைக்கப்பட்டுள்ள ராட்சத தூணில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவொற்றியூர்:
வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஏராளமான வட மாநிலத்தவர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு திருவொற்றியூர் தேரடி அருகே மெட்ரோ ரெயிலுக்காக போடப்பட்ட ராட்சத தூண் ஒன்றில் வட மாநில வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இதை பார்த்த பொதுமக்கள் திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் தீயணைப்பு துறை உதவியுடன் தூக்கில் தொங்கிய வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்டவர் யார் மெட்ரோ ரெயில் பணி ஊழியரா? அல்லது வெளி நபரா? அவர் எப்படி ராட்சத தூண் மேலே ஏறினார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஏராளமான வட மாநிலத்தவர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு திருவொற்றியூர் தேரடி அருகே மெட்ரோ ரெயிலுக்காக போடப்பட்ட ராட்சத தூண் ஒன்றில் வட மாநில வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இதை பார்த்த பொதுமக்கள் திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் தீயணைப்பு துறை உதவியுடன் தூக்கில் தொங்கிய வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்டவர் யார் மெட்ரோ ரெயில் பணி ஊழியரா? அல்லது வெளி நபரா? அவர் எப்படி ராட்சத தூண் மேலே ஏறினார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X