search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை மாயம்
    X
    நகை மாயம்

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் 8 பவுன் நகையுடன் கைப்பை மாயம்

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் 8 பவுன் நகையுடன் கைப்பை மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலபிரசாத் இவரது மனைவி கவிதா (40). இவர் சென்னை கீழ்பாக்கத்தில் வசித்து வரும் தந்தையை பார்ப்பதற்காக பெங்களூரில் இருந்து இன்று காலை 6 மணி அளவில் கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார்.

    அப்போது கவிதா தனது இருக்கையின் மேல் வைத்து இருந்த கைப் பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். 8 பவுன் நகையுடன் கைப்பையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. 

    இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×