search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் நிறுத்தம்
    X
    மின்சாரம் நிறுத்தம்

    அவனியாபுரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

    அவனியாபுரம் பகுதியில் நாளை (செவ்வாய்க் கிழமை) மின்சப்ளை நிறுத்தப்படுகிறது.

    மதுரை:

    மதுரை மேற்கு மின் வினியோக செயற்பொறியாளர் ராஜாகாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அந்த நேரத்தில் எம்.எம்.சி. காலனி, சி.ஏ.எஸ். நகர், பி.சி.எம். சொக்கு பிள்ளை நகர் முழுவதும், ஜெயபாரத் சிட்டி, பைபாஸ் ரோடு முழுவதும், அவனியாபுரம் மேல்நிலைப்பள்ளி, ஸ்டேட் பேங்க், மல்லிகை வீடுகள், அனியாபுரம் பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி முழுவதும், பாப்பாகுடி, வள்ளலானந்தாபுரம், ஜே.ஜே.நகர், வைக்கம் பெரியார் நகர் ரோடு, ரிங் ரோடு, பெரியசாமி நகர் முழுவதும், திருப்பதி நகர் முழுவதும், அண்ணாநகர், அக்ரகாரம், புரசரடி ஜே.பி.நகர், வெள்ளக்கல், திருப்பரங்குன்றம் ரோடு, பர்மா காலனி, கணேசபுரம், மண்டேலா நகர், விமான நிலைய குடியிருப்பு பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    மேற்கண்டவாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×