என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளி விடுதியில் பாம்பு கடித்து மாணவி பலி
Byமாலை மலர்16 Sep 2019 3:25 AM GMT (Updated: 16 Sep 2019 3:25 AM GMT)
திண்டுக்கல்லில் பள்ளி விடுதியில் பாம்பு கடித்து, பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்:
கொடைக்கானல் பெரியூர் பகுதியை சேர்ந்தவர் ராமன். கூலித்தொழிலாளி. அவருடைய மகள் வர்ஷா (வயது 14). இவள், திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இவள் அந்த பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தாள். நேற்று முன்தினம் இரவு விடுதிக்குள் புகுந்த பாம்பு ஒன்று வர்ஷாவை கடித்து விட்டது. இதையடுத்து அவளை ஆசிரியர்கள், மாணவிகள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வர்ஷா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி விடுதியில் பாம்பு கடித்து, பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானல் பெரியூர் பகுதியை சேர்ந்தவர் ராமன். கூலித்தொழிலாளி. அவருடைய மகள் வர்ஷா (வயது 14). இவள், திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இவள் அந்த பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தாள். நேற்று முன்தினம் இரவு விடுதிக்குள் புகுந்த பாம்பு ஒன்று வர்ஷாவை கடித்து விட்டது. இதையடுத்து அவளை ஆசிரியர்கள், மாணவிகள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வர்ஷா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி விடுதியில் பாம்பு கடித்து, பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X