search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு புகுந்து கொள்ளை
    X
    வீடு புகுந்து கொள்ளை

    சிவகாசியில் 2 வீடுகளில் கொள்ளை

    சிவகாசியில் 2 வீடுகளுக்குள் மர்ம மனிதர்கள் புகுந்து நகைகளை கொள்ளையடித்தனர்.

    விருதுநகர்:

    சிவகாசி விளாம்பட்டி சாலையில் அருண்நகரில் வசிப்பவர் ஜெயச்சந்திரன் (வயது54). இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். அவர்கள் ஊர் திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் சிவகாசி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டின் கதவை உடைத்து புகுந்த மர்ம மனிதர்கள் 4 பவுன் நகையை திருடிச்சென்றதாக ஜெயச்சந்திரன் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதே பகுதியில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் சீனிவாசன் என்பவரது வீட்டிலும் மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் பீரோவை திறந்து பார்த்துள்ளனர்.

    அங்கு நகை-பணம் இல்லாததால் பொருட்களை வீடு முழுவதும் சிதறிடித்துச் சென்றுள்ளனர். இது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×