என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே மணல் அள்ளிய லாரி பறிமுதல்
Byமாலை மலர்12 Sep 2019 6:06 PM GMT (Updated: 12 Sep 2019 6:06 PM GMT)
ஆண்டிப்பட்டி அருகே ஓடையில்அனுமதி இன்றி மணல் அள்ளி இருந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கண்டமனூர்:
ஆண்டிப்பட்டி அருகே வாலூத்து ஓடையில் இருந்து மணல் அள்ளி செல்வதாக ராஜதானி போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் ராஜதானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, தனிப்பிரிவு போலீசார் மணிவாசகம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது ஓடையில் இருந்து லாரியில் மணல் அள்ளி கொண்டிருந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
மணல் அள்ளி இருந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், தப்பியோடியவர்கள் பிராதிக்காரன்பட்டியை சேர்ந்த பாண்டியன் மற்றும் நாச்சியார்புரத்தை சேர்ந்த பாக்கியராஜ் என்றும், அவர்களுக்கு சொந்தமான லாரியில் அனுமதியின்றி மணல் அள்ளியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X