என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருத்தணியில் 17 செ.மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது
Byமாலை மலர்12 Sep 2019 7:36 AM GMT (Updated: 12 Sep 2019 7:36 AM GMT)
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இன்று பரவலாக மழை கொட்டியது. அதிகபட்சமாக திருத்தணியில் 17.3 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
திருவள்ளூர்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.
நேற்றும், நேற்று முன் தினமும் அதிகாலை சிறிது நேரம் மழை கொட்டியது. பின்னர் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இதன் காரணமாக வெப்பத்தால் தவித்த மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலையும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சுமார் அரைமணி நேரம் நல்ல மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை கொட்டியது. அதிகபட்சமாக திருத்தணியில் 17.3 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
நள்ளிரவு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்து. இதனால் திருத்தணி பகுதி மழைநீரில் மிதந்தது.
லட்சுமாபுரம், வேலஞ்சேரி, முருக்கம்பட்டு, கீழாந்தூர் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த திடீர் கனமழை காரணமாக திருத்தணி கொசஸ்தலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிக அளவு தண்ணீர் செல்வதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.
இதேபோல் ஆர்.கே .பேட்டை, தாமரைப்பாக்கம், பள்ளிப்பட்டு, ஜமீன் கொரட்டூர், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
திருள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
திருத்தணி - 173
கும்மிடிப்பூண்டி - 18
செங்குன்றம் - 10
பள்ளிப்பட்டு - 80
ஆர்.கே.பேட்டை - 86
சோழவரம் - 28
பொன்னேரி - 23
செம்பரம்பாக்கம் - 24
ஜமீன்கொரட்டூர் - 32
பூந்தமல்லி - 11
திருவாலங்காடு - 21
தாமரைப்பாக்கம் - 36
திருவள்ளூர் - 24
பூண்டி - 73
ஊத்துக்கோட்டை - 15
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.
நேற்றும், நேற்று முன் தினமும் அதிகாலை சிறிது நேரம் மழை கொட்டியது. பின்னர் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இதன் காரணமாக வெப்பத்தால் தவித்த மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலையும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சுமார் அரைமணி நேரம் நல்ல மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை கொட்டியது. அதிகபட்சமாக திருத்தணியில் 17.3 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
நள்ளிரவு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்து. இதனால் திருத்தணி பகுதி மழைநீரில் மிதந்தது.
லட்சுமாபுரம், வேலஞ்சேரி, முருக்கம்பட்டு, கீழாந்தூர் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த திடீர் கனமழை காரணமாக திருத்தணி கொசஸ்தலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிக அளவு தண்ணீர் செல்வதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.
இதேபோல் ஆர்.கே .பேட்டை, தாமரைப்பாக்கம், பள்ளிப்பட்டு, ஜமீன் கொரட்டூர், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
திருள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
திருத்தணி - 173
கும்மிடிப்பூண்டி - 18
செங்குன்றம் - 10
பள்ளிப்பட்டு - 80
ஆர்.கே.பேட்டை - 86
சோழவரம் - 28
பொன்னேரி - 23
செம்பரம்பாக்கம் - 24
ஜமீன்கொரட்டூர் - 32
பூந்தமல்லி - 11
திருவாலங்காடு - 21
தாமரைப்பாக்கம் - 36
திருவள்ளூர் - 24
பூண்டி - 73
ஊத்துக்கோட்டை - 15
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X