என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போச்சம்பள்ளி அருகே டிப்பர் லாரி மோதி கூலித்தொழிலாளி பலி
Byமாலை மலர்11 Sep 2019 12:42 PM GMT (Updated: 11 Sep 2019 12:42 PM GMT)
போச்சம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலியானார். உடன் சென்ற நண்பர் படுகாயம் அடைந்தார்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த தளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவருக்கு சரசு என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கூலித்தொழிலாளியான மாது நேற்று தனது நண்பர் மயில்சாமியுடன் காவேரிப்பட்டணம் வரை மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் இரவு ஊருக்கு திரும்பி வந்தனர். அப்போது தளிப்பட்டி கூட்ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த டிப்பர்லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த நாகரசம்பட்டி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த சிகிச்சைக்காக மயில்சாமியை பெங்களூருவில் தனியார் ஆஸ்பத்திரியிலும், மாதுவை சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். மாது சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X