search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    அரூர் அருகே கூட்டுறவு சங்க ஆலை சூப்பர்வைசர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

    அரூர் அருகே கூட்டுறவு சங்க ஆலை சூப்பர்வைசர் வீட்டில் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    அரூர்:

    தர்மபுரி மாவட்டம் அரூர் பறையப்பட்டி பகுதியை சேர்ந்த விஜயக்குமார் (வயது42). இவர் சுப்ரமணிய கூட்டுறவு சங்க ஆலையில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றனர். பின்னர் மாலை மீண்டும் கவிதா வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அவர் வீட்டிற்குள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து 1 பவுன் நகை மற்றும் ரூ.27 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடிசென்றது தெரியவந்தது. உடனே அவர் தனது கணவர் விஜயக்குமாருக்கு தகவல் தெரிவித்தார். 

    இந்த சம்பவம் குறித்து விஜயக்குமார் கோபிநாதம் பட்டி கூட்ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×