என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்தியால்பேட்டையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு
Byமாலை மலர்10 Sep 2019 1:22 PM GMT (Updated: 10 Sep 2019 1:22 PM GMT)
முத்தியால்பேட்டையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்தவர் லோகேஷ். இவர் வெளிநாட்டில் கப்பலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பிரசன்னாதேவி (வயது 34). இவர் சம்பவத்தன்று கடலூரில் நடந்த உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து இரவு 10 மணியளவில் சென்னையில் வசிக்கும் தனது அக்காள் லாவண்யாவை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
வைத்திக்குப்பம் பாப்பாம்மாள் கோவில் வழியாக வந்து கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென பிரசன்னாதேவி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்தான். சுதாரித்துக்கொண்ட பிரசன்னா தேவி செயினை கையில் இறுக்கமாக பிடித்தார். ஆனாலும் பாதி செயின் கொள்ளையன் கையில் சிக்கிக்கொண்டது. அந்த செயினுடன் கொள்ளையன் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டான்.
இதுகுறித்து பிரசன்னா தேவி முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X