என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கயத்தாறு அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Byமாலை மலர்9 Sep 2019 2:29 PM GMT (Updated: 9 Sep 2019 2:29 PM GMT)
கயத்தாறு அருகே காலில் உள்ள புண் குணமாகாததால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள கரிசல்குளத்தை சேர்ந்தவர் வீரபுத்திரன் (வயது 50), விவசாயி. இவருக்கு 10 வருடங்களுக்கு முன்பு கிணறு வெட்டும் போது காலில் கல் விழுந்து புண் ஏற்பட்டுள்ளது. இந்த புண்ணிற்கு பல்வேறு பகுதியில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. சம்பவத்தன்று இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து உயிருக்கு போராடி உள்ளார்.
அப்போது அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் வீரபுத்திரன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X