என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தொடர் மழை காரணமாக தொழிலில் நஷ்டம்- விஷம் குடித்து ஐஸ் வியாபாரி தற்கொலை
கோவை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள எல்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் சுடலைமணி (வயது 36). ஐஸ் வியாபாரி. இவரது மனைவி கார்த்திகா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஐஸ் விற்கவில்லை. இதனால் சுடலை மணிக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் குடும்பம் நடத்த பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.
இதனால் கடந்த சில நாட்களாக சுடலை மணி மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று அவர் தனது மனைவியிடம் வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் வாழ்கையில் விரக்தி அடைந்த அவர் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஆலமரம் அருகே வைத்து விஷத்தை குடித்தார். உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுடலை மணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்