search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி 5-ந்தேதி குமரி வருகை

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி 5-ந்தேதி குமரி செல்கிறார். ஒரு லட்சம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைக்கிறார்.

    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் வட்டார தலைவர்கள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வட்டார தலைவர்கள் கிளாட்சன், ஜெரால்டு கென்னடி, வைகுண்டதாஸ், நாஞ்சில் செல்வராஜ், அசோக்ராஜ், காலபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி வருகிற 5-ந்தேதி குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தர உள்ளார். குமரிக்கு வரும் கே.எஸ். அழகிரிக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்குவது, குமரி மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைத்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பொதுமக்களிடமும், மாணவ-மாணவிகளிட மும் ஒரு லட்சம் கையெழுத் துக்கள் பெறுவதற்கான பணியினை குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செய்து வருகிறது.

    கையெழுத்து இயக்கத்தை குமரி மாவட்டம் வருகை தரும் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×